2019 ஆம் ஆண்டின் சி40 உலக மாநகராட்சித் தலைவர்கள் உச்சி மாநாட்டின் 7வது பதிப்பு
October 13 , 2019 2127 days 717 0
டென்மார்க்கின் கோபன்ஹேகனில் 2019 ஆம் ஆண்டின் சி40 உலக மாநகராட்சித் தலைவர்கள் உச்சி மாநாட்டின் 7வது பதிப்பானது நடத்தப்பட்டது.
பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதும் காலநிலைப் பின்னடைவை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
சி40 என்பது போக்குவரத்து, எரிசக்தி பயன்பாடு மற்றும் நுகர்வு ஆகியவற்றில் நிலையான மாற்றங்களைச் செய்வதில் ஒன்றிணைந்த முக்கிய சர்வதேச நகரங்களின் குழு ஆகும்.
நகரத்தின் பசுமைப் போக்குவரத்து இயக்கத்திற்காக கொல்கத்தாவானது மதிப்பு மிக்க “6வது சி40 நகரங்கள் ப்ளூம்பெர்க் தொண்டு விருதுகள் 2019” என்ற விருதைப் பெற்றுள்ளது.