2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் கைரேகைப் பதிவுகள் அறிக்கை
September 13 , 2020 2129 days 889 0
“இந்தியாவில் கைரேகைப் பதிவுகள் - 2019” என்ற அறிக்கையானது மத்திய கைரேகை முகமையின் வருடாந்திர வெளியீட்டின் 23வது பதிப்பாகும்.
இது தேசியக் குற்ற ஆவணங்கள் முகமையின் கீழ் செயல்படுகின்றது.
இதில் 2019 ஆம் ஆண்டில் 69,636 ஆய்வுத் துண்டுகளைக் கண்டுபிடித்ததன் மூலம் குஜராத் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்து 11,524 நிகழ்வுகளுடன் தமிழ்நாடு 2வது இடத்திலும் 8,517 நிகழ்வுகளுடன் தில்லி 3வது இடத்திலும் உள்ளன.