2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பாக்டீரியத் தொற்றுகள்
May 6 , 2025 38 days 67 0
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான பாக்டீரியத் தொற்றுகளில் எட்டு சதவீதம் மட்டுமே சரியான முறையில் சிகிச்சையளிக்கப்பட்டன.
இதில் ஆய்வு நடத்தப்பட்ட எட்டு நாடுகளில் சுமார் 15 லட்சம் பாக்டீரியத் தொற்றுகள் கார்பபெனெம்ஸ் எனும் ஒரு நுண்ணுயிர் கொல்லி மருந்திற்கு எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளன.
கார்பபெனெம்ஸ் என்பது கடுமையான பாக்டீரியத் தொற்றுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தாகும்.
சுமார் 7.8 சதவீத நோய்த்தொற்றுகள் மிக முறையாக சிகிச்சையளிக்கப்பட்டதுடன், இந்தியா பெரும்பாலான சிகிச்சை தொகுப்புகளை (80.5 சதவீதம்; 83,468 தொகுப்புகள்) வாங்கியது.
ஆண்டுதோறும் 1.1 மில்லியன் உயிரிழப்புகள் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பின் (AMR) நேரடி விளைவாக ஏற்பட்டதாகும்.
இது 2022 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் மலேரியாவால் ஏற்பட்ட மொத்த உயிர் இழப்புகளை விட அதிகமாகும்.