2019 ஆம் ஆண்டு ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவுச் சின்னம் (திருத்தம்) மசோதா
November 30 , 2019 2021 days 747 0
2019 ஆம் ஆண்டு ஜூலை 08 ஆம் தேதியன்று இந்த மசோதாவை, “1951 ஆம் ஆண்டு ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவுச் சின்னத்திற்கானச் சட்டத்தில்” திருத்தம் செய்வதற்காக, கலாச்சாரத் துறை இணை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் மக்களவையில் அறிமுகப் படுத்தினார்.
இது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 ஆம் தேதியன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டது.
அமிர்தசரஸ் ஜாலியன்வாலா பாக் நகரில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியன்று கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாக ஒரு தேசிய நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கின்றது.
கூடுதலாக, இது ஒரு தேசிய நினைவுச் சின்னத்தை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளையை உருவாக்குகின்றது.
பின்வரும் நபர்கள் அந்த அமைப்பின் அறங்காவலர்களாக இருந்தனர் - இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர், பிரதமர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர், மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சர், பஞ்சாபின் ஆளுநர் மற்றும் முதல்வர், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட 3 புகழ்பெற்ற நபர்கள்.
தற்போதைய மசோதாவானது இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரை அதன் அறங்காவலர் பொறுப்பில் இருந்து "நீக்குமாறு" இந்த சட்டத்தைத் திருத்துகின்றது.
மேலும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதபோது, மக்களவையில் ஒரு மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் அதன் அறங்காவலராக இருப்பார் என்றும் இது தெளிவு படுத்துகின்றது.
அறங்காவலர்களாகப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று புகழ்பெற்ற நபர்கள் இப்போது 5 ஆண்டு காலம் முடிவடைவதற்கு முன்னர் எந்தவொரு காரணமும் கூறப்படாமல் நீக்கப் படலாம்.