2023-24 ஆம் ஆண்டில் கேலோ இந்தியா தேசிய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்
November 20 , 2022 1007 days 910 0
உத்தரப் பிரதேச அரசானது, 2023-24 ஆம் ஆண்டில் கேலோ இந்தியா தேசிய பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகளை அம்மாநிலத்தின் நான்கு நகரங்களில் நடத்த உள்ளது.
இந்த நகரங்கள் லக்னோ, கோரக்பூர், வாரணாசி மற்றும் நொய்டா ஆகியனவாகும்.
ஒடிசா மற்றும் கர்நாடகா ஆகியற்றிற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேச மாநிலம் என்பது தேசியப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை நடத்துதற்கான ஒரு வாய்ப்பை முதல் முறையாகப் பெற்றுள்ளது.