2023 ஆம் நிதியாண்டிற்கான அந்நியத் தொகுப்பு முதலீட்டு இலக்கு நாடுகள்
April 15 , 2023 1043 days 492 0
வரி ஏய்ப்புப் புகலிட நாடான மொரீசியஸிலிருந்து இந்திய மூலதனச் சந்தைகளுக்குள் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் கடுமையான சரிவைக் கண்டன.
நார்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 2022-23 ஆம் ஆண்டில் சாதகமான ஒரு சூழலைக் கண்டன.
மொரீசியஸ் நாட்டில் பாதுகாவலர் மேலாண்மையின் கீழ் உள்ள மொத்த சொத்துக்கள் (AUC) ஆனது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் கிட்டத்தட்ட 42 சதவீதம் குறைந்து ரூ.6.66 டிரில்லியன் ஆக உள்ளது.
இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.10.88 டிரில்லியனாக இருந்தது.
நார்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள பாதுகாவலர் மேலாண்மையின் கீழ் உள்ள மொத்தச் சொத்துக்களில் முறையே 13 சதவீதம் மற்றும் 5 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளன.