TNPSC Thervupettagam

2025ல் 30 லட்சம் இணைய வழித் தாக்குதல் சம்பவங்கள் - இந்தியா

February 4 , 2026 14 hrs 0 min 18 0
  • இந்திய கணினி அவசரகாலப் பதிலளிப்புக் குழு (CERT-In) இணையவழித் தாக்குதல்களுக்கு எதிரான இந்தியாவின் முன்னணிப் பாதுகாப்பு அமைப்பாக உருவெடுத்துள்ளது.
  • இது 2004 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 70B-இன் கீழ் நிறுவப்பட்டது.
  • CERT-In, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இணைய வழிச் சம்பவங்களுக்கான தேசியப் பதிலளிப்பு முகமையாகச் செயல் படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டில், CERT-In 29.44 லட்சத்திற்கும் மேற்பட்ட இணையவழிச் சம்பவங்களைக் கையாண்டது.
  • 2025 ஆம் ஆண்டளவில், இந்தியாவில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 100 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி, 100.29 கோடியாக உயர்ந்தது என்ற நிலையில் இது மார்ச் 2014ல் இருந்த 25.15 கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகும்.
  • உலகப் பொருளாதார மன்றத்தால் (WEF) வெளியிடப்பட்ட 'குளோபல் சைபர் செக்யூரிட்டி அவுட்லுக் 2025' அறிக்கையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சூழ்நிலை விழிப்புணர்வு அமைப்புகளைப் பயன்படுத்தியதற்காக CERT-In சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்