2025 ஆம் ஆண்டிற்கான தங்கக் கடன்களுக்கான புதிய RBI விதிமுறைகள்
May 30 , 2025 11 days 64 0
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மூலம் தங்கக் கடன்களை வழங்கச் செய்வதற்கான பல நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்காகவும் மற்றும் தரப்படுத்துவதற்காகவும் வேண்டி இந்திய ரிசர்வ் வங்கி வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு ஆனது, ஒரு பொருளின் மதிப்பிற்கும் கடனுக்கும் உள்ள விகிதத்தினை அனைத்து தங்கக் கடன்களுக்கும், தற்போதுள்ள 80 சதவீதத்திலிருந்து 75% என்ற ஒரு வரம்புக்குள் கொண்டு வருகிறது.
கொள்முதல் ரசீதுகள் கிடைக்கவில்லை என்றால் கடன் வாங்குபவர்கள் உரிமைச் சான்று அல்லது அறிவிப்பை வழங்க வேண்டும்.
இதில் கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் தூய்மை, எடை, கழித்தல்கள், படம் மற்றும் மதிப்பை விவரிக்கும் சான்றிதழை வழங்க வேண்டும்.
22 காரட் அல்லது அதற்கு மேற்பட்டத் தூய்மையுடன் கூடிய தங்க நகைகள், தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கியில் விற்கப்படும் நாணயங்கள் மீது மட்டுமே கடன்கள் அனுமதிக்கப்படும்.
குறைந்தபட்சம் 925 தூய்மையுடன் கூடிய வெள்ளி நகைகள், ஆபரணங்கள் மற்றும் வங்கியில் விற்கப்படும் வெள்ளி நாணயங்கள் மீது மட்டுமே கடன்கள் பெறலாம்.
இந்த வரைவு ஆனது ஒரு கடனாளிக்கு 1 கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் என்ற வரம்பை முன்மொழிகிறது.