2025 ஆம் ஆண்டு இருவாட்சித் திருவிழாவிற்கான பங்குதாரர் நாடு
November 22 , 2025 212 days 286 0
நாகாலாந்தில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு இருவாட்சித் திருவிழாவிற்கான பங்கு தாரர் நாடாக ஐக்கியப் பேரரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவானது, டிசம்பர் 01 முதல் 10 ஆம் தேதி வரை கோஹிமாவில் உள்ள கிசாமா பாரம்பரிய கிராமத்தில் நடைபெறும்.
இது பாரம்பரிய மற்றும் சமகால கலாச்சார நிகழ்வுகளின் முனைப்பு மிக்க கலவையின் மூலம் நாகாலாந்தின் வளமான பழங்குடி பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது மற்றும் பாதுகாக்கிறது.
இந்தத் திருவிழாவானது "திருவிழாக்களின் திருவிழா" என்றும் அழைக்கப்படுகிறது.