2025 ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத் தொடர்
- 2025 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஆனது ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு இது குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
- பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் தலைமையிலான பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது இந்தத் தேதிகளைப் பரிந்துரை செய்துள்ளது.
- இக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தேதிகளில் பாராளுமன்றக் கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு அது பரிந்துரை அனுப்பியிருந்தது.
- பொதுவாக பாராளுமன்றக் கூட்டத் தொடருக்கான தேதிகள் சில நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும்.
- இதுவரையில் ஒரு கூட்டத் தொடர் தொடங்குவதற்கு 47 நாட்களுக்கு முன்பு தேதிகள் அறிவிக்கப் பட்டதில்லை.
- மேலும் கடந்த 11 ஆண்டுகளில், அரசாங்கமானது பெரும்பாலும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்பு அறிவித்து மழைக் காலக் கூட்டத் தொடரை நடத்தியுள்ளது.
- மேலும் அரசு கூட்டத் தொடர் குறித்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அறிவித்தது இதுவே முதல் முறையாகும்.

Post Views:
34