TNPSC Thervupettagam

2025 நில அதிர்வு விதிமுறை

March 16 , 2026 14 hrs 0 min 22 0
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS) 2025 நில அதிர்வு விதிமுறையை (IS 1893) திரும்பப் பெற்றுள்ளது.
  • இதற்கு முந்தைய தரநிலையான IS 1893 (பகுதி 1): 2016 இப்போது இந்தியாவில் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • நில அதிர்வு விதிமுறை என்பது கட்டிடங்கள் நிலநடுக்க விசைகளைத் தாங்கி சேதத்தைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுமானத் தரநிலைகளின் தொகுப்பாகும்.
  • இந்த விதிமுறையின் கீழ் இந்தியா நான்கு நில அதிர்வு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: மண்டலம் II (குறைந்த பாதிப்பு), மண்டலம் III (மிதமான பாதிப்பு), மண்டலம் IV (அதிக பாதிப்பு), மற்றும் மண்டலம் V (மிக அதிக பாதிப்பு).
  • நில அதிர்வு மண்டல அமைப்பின் படி, இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 59% நில நடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்