TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சீர்மிகு நகரங்கள்

August 28 , 2025 25 days 85 0
  • சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (IMD) ஆனது 2025 ஆம் ஆண்டு சீர்மிகு நகரக் குறியீட்டினை வெளியிட்டது.
  • சூரிச் AAA மதிப்பீட்டில் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து ஒஸ்லோ மற்றும் ஜெனீவா ஆகிய இரண்டும் AAA மதிப்பீடுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
  • துபாய் 12வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு முன்னேறி, A மதிப்பீட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
  • இலண்டன் AA மதிப்பீட்டில் இரண்டு இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • லௌசேன் 10வது இடத்தைப் பிடித்ததுடன், இப்பட்டியலில் மூன்று சுவிஸ் நகரங்கள் முதல் பத்து இடங்களில் உள்ளன.
  • இந்தக் குறியீடு ஆனது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, இயக்கம், செயல்பாடுகள், வாய்ப்புகள் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்களை மதிப்பிடுகிறது.
  • 2025 ஆம் ஆண்டு குறியீட்டில் உலகின் முதல் 100 இடங்களுக்கு அப்பால் இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
  • டெல்லி (CC), மும்பை (CC), ஐதராபாத் (CCC), மற்றும் பெங்களூரு (CC) ஆகியவை முறையே 104வது, 106வது, 109வது மற்றும் 110வது இடங்களைப் பிடித்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்