TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டிற்கான தங்கக் கடன்களுக்கான புதிய RBI விதிமுறைகள்

May 30 , 2025 11 days 65 0
  • வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மூலம் தங்கக் கடன்களை வழங்கச் செய்வதற்கான பல நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்காகவும் மற்றும் தரப்படுத்துவதற்காகவும் வேண்டி இந்திய ரிசர்வ் வங்கி வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இந்த வரைவு ஆனது, ஒரு பொருளின் மதிப்பிற்கும் கடனுக்கும் உள்ள விகிதத்தினை அனைத்து தங்கக் கடன்களுக்கும், தற்போதுள்ள 80 சதவீதத்திலிருந்து 75% என்ற ஒரு வரம்புக்குள் கொண்டு வருகிறது.
  • கொள்முதல் ரசீதுகள் கிடைக்கவில்லை என்றால் கடன் வாங்குபவர்கள் உரிமைச் சான்று அல்லது அறிவிப்பை வழங்க வேண்டும்.
  • இதில் கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் தூய்மை, எடை, கழித்தல்கள், படம் மற்றும் மதிப்பை விவரிக்கும் சான்றிதழை வழங்க வேண்டும்.
  • 22 காரட் அல்லது அதற்கு மேற்பட்டத் தூய்மையுடன் கூடிய தங்க நகைகள், தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கியில் விற்கப்படும் நாணயங்கள் மீது மட்டுமே கடன்கள் அனுமதிக்கப்படும்.
  • குறைந்தபட்சம் 925 தூய்மையுடன் கூடிய வெள்ளி நகைகள், ஆபரணங்கள் மற்றும் வங்கியில் விற்கப்படும் வெள்ளி நாணயங்கள் மீது மட்டுமே கடன்கள் பெறலாம்.
  • இந்த வரைவு ஆனது ஒரு கடனாளிக்கு 1 கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் என்ற வரம்பை முன்மொழிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்