2025 ஆம் ஆண்டில், காட்டுத்தீ, வெள்ளம், புயல்கள், வெப்ப அலைகள் மற்றும் வறட்சி ஆகியவை உலகளவில் 120 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தின.
சுமார் 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதத்தையும் 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கலிபோர்னியா காட்டுத்தீ அதிக செலவினத்தினை ஏற்படுத்திய ஒரு ஒற்றைப் பேரழிவாகும்.
தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் சுமார் 25 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதத்தையும் 1,750க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.
சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்தது என்பதோடுஇந்தியா மற்றும் பாகிஸ்தானில் 6 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதங்களை ஏற்படுத்தியதோடு அது 1,860க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் எட்டியது.
2025 ஆம் ஆண்டில் ஆசிய நாடுகள் முதல் ஆறு அதிக செலவினம் மிக்க பேரழிவுகளில் நான்கை எதிர் கொண்டன.