ஒடிசாவின் எட்டு மாவட்டங்களில் பதிவாகியுள்ள வயிற்றுப் போக்குப் பெருந்தொற்று ஆனது அந்த மாநிலத்தின் பொதுச் சுகாதார நடவடிக்கைகளுக்கான ஒரு கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளது.
பல பகுதிகளில் கொடிய விப்ரியோ காலரா (காலரா) பாக்டீரியப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 2022 ஆம் ஆண்டு ஜூலை - நவம்பர் ஆகிய மாதங்களில் காலரா பரவியது.
காலரா என்பது விப்ரியோ காலரே என்ற ஒரு பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
இது அசுத்தமான உணவு மற்றும் நீரின் மூலம் பரவுகிறது.