TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் புலிகளின் உயிரிழப்பு விகிதம்

January 4 , 2026 10 days 91 0
  • தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் (NTCA) வெளியிட்ட சமீபத்தியத் தரவுகளின் படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 166 புலிகள் இறப்பு பதிவாகியுள்ளது.
  • இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் பதிவான 126 புலி இறப்புகளை விட 40 அதிகம் ஆகும்.
  • 1973 ஆம் ஆண்டில் புலிகள் வளங்காப்புத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இது மிக அதிக வருடாந்திரப் புலி இறப்பு விகிதமாகும்.
  • மத்தியப் பிரதேசத்தில், இந்த ஆண்டில் 55 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான புலி இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • குறிப்பிடத்தக்க புலி இறப்புகள் பதிவான பிற மாநிலங்களில் மகாராஷ்டிராவில் 38 இறப்புகள், கேரளாவில் 13 இறப்புகள் மற்றும் அசாமில் 12 இறப்புகள் பதிவாகின.
  • 2025 ஆம் ஆண்டில் பதிவான மொத்த புலி இறப்புகளில், 31 புலிக் குட்டிகள் ஆகும் என்ற நிலையில், இது இளம் புலிகளின் எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலையை எடுத்துக் காட்டுகின்றன.
  • புலிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இட நெருக்கடியால் எழும் பிராந்திய மோதல்கள் ஒரு முக்கிய காரணமாக நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • இழப்புகள் இருந்தபோதிலும், உலகின் புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 75% புலிகள் இந்தியாவில் உள்ளன என்ற நிலையில் 2018 ஆம் ஆண்டில் 2,967 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 3,682 ஆக அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்