கடந்த நான்கு ஆண்டுகளில், எரிசக்தித் தேவைக்கும் அதன் உற்பத்தித் திறனுக்கும் இடையிலான இடைவெளி 0.1% ஆகக் குறைந்துள்ளது மற்றும் மொத்த நிறுவப்பட்டத் திறன் 470 GW ஆக அதிகரித்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் 13,74,024 மில்லியன் அலகாக இருந்த இந்தியாவின் உற்பத்தி என்பது, 2024-25 ஆம் ஆண்டில் 15,46,229 மில்லியன் அலகாக அதிகரித்துள்ளதால், 2021-22 ஆம் ஆண்டில் 0.4% ஆக இருந்த இடைவெளி 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 0.1% ஆகக் குறைந்துள்ளது.
தற்போது, அனல் மின் உற்பத்தி (நிலக்கரி, டீசல், லிக்னைட் மற்றும் இயற்கை எரிவாயு) மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆனது 12,41,261 மில்லியன் அலகுகள் (MU) ஆகும்.
அணு மற்றும் புனல் மின் மூலங்கள் முறையே 51,962 மில்லியன் அலகுகள் மற்றும் 1,39,780 மில்லியன் அலகுகள் ஆகும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2,30,868 மில்லியன் அலகுகள் ஆற்றல் உற்பத்தி செய்யப்பட்டது.
இவற்றில் காற்றாலை 78,214 மில்லியன் அலகுகள், சூரிய சக்தி 1,27,339 மில்லியன் அலகுகள், உயிரி எரிபொருள் 3392 மில்லியன் அலகுகள், கரும்பு ஆலைக் கழிவு மூலம் 8349 மில்லியன் அலகுகள், சிறிய புனல் மின்சாரம் 10,951 மில்லியன் அலகுகள் மற்றும் பிற 2621 மில்லியன் அலகுகள் பங்கினைக் கொண்டுள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பின் சதவீதமானது 2021-22 ஆம் ஆண்டில் 11.5 சதவீதத்திலிருந்து 2024-2025 ஆம் ஆண்டில் 13.78% ஆக படிப்படியாக அதிகரித்துள்ளது.
தேசிய மின் கட்டமைப்பு ஆனது, நாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான மின்சார விநியோகத்தினை கண்காணிக்கவும், ஒழுங்குமுறைப் படுத்தவும், எளிதாக்கவும் என அரசாங்கத்தால் நடத்தப் படும் இந்திய மின் கட்டமைப்பு விநியோக கழக லிமிடெட் மூலம் பராமரிக்கப்படுகிறது.
தெற்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பிராந்தியங்கள் ஆனது, இந்தியாவின் மிகவும் பெரிய மின் நுகர்வு மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகியவற்றை உள்ளடக்கியது.
அவை பல ஆண்டுகளாக தனது ஆற்றல் தேவை மற்றும் உற்பத்தி இடைவெளியை 0.1% ஆக கட்டுக்குள் வைத்துள்ளன.
மேற்கு மாநிலங்களில், அதன் மின் தேவை 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 1,72,823 மில்லியன் அலகிலிருந்து 2023-2024 ஆம் ஆண்டில் சுமார் 2,07,018 மில்லியன் அலகாக அதிகரித்துள்ளதுடன் மகாராஷ்டிரா மிகப்பெரிய மின் நுகர்வு கொண்ட மாநிலமாக உள்ளது.
இருப்பினும், அதன் மின்ஆற்றல் தேவை மற்றும் உற்பத்தி இடைவெளியை வெறும் 0.1% ஆக மட்டுமே வைத்து, அதன் மின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய முயன்றுள்ளது.
இப்பிராந்தியத்தின் இரண்டாவது பெரிய மின் நுகர்வு மாநிலமான குஜராத்தில் அதன் மின்சாரத் தேவை சுமார் 1,29,953 மில்லியன் அலகிலிருந்து 1,45,768 மில்லியன் அலகாக அதிகரித்திருந்தாலும், அதன் ஆற்றல் தேவை மற்றும் உற்பத்தி இடைவெளி 0% ஆகவே உள்ளது.
தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை என்பது அதிகபட்சமாக சுமார் 1,09,816 மில்லியன் அலகிலிருந்து 1,26,163 மில்லியன் அலகாக உள்ளதுடன் அதன் ஆற்றல் தேவை மற்றும் உற்பத்தி இடைவெளியும் 0% ஆக உள்ளது.
இதேபோல், தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகியவை 0% ஆற்றல் தேவை மற்றும் உற்பத்தி இடைவெளியை பேணி வருகின்றன.
ஆனால், கிழக்கு மின் கட்டமைப்பின் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் தங்கள் மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் உள்ளன.