2025 ஆம் ஆண்டு இடைத் தேர்தல்களில் அறிமுகப்படுத்தப்படும் முக்கியப் படைப்பாக்கங்கள்
June 23 , 2025 7 days 37 0
குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நிறைவடைந்தன.
இதில் மிகவும் முதன்முறையாக, அனைத்து வாக்குச் சாவடிகளின் நுழைவாயிலிலும் வாக்காளர்களுக்கு தங்களது கைபேசிகளைப் பாதுகாப்பான முறையில் ஒப்படைத்து செல்லும் வசதிகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
இதில் மேம்படுத்தப்பட்ட ECINET செயலியைப் பயன்படுத்தி, தலைமை அதிகாரிகள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை வாக்குப்பதிவுத் தரவை நேரடியாக உள்ளிட வழி வகை செய்யப்பட்டது.
முதல் முறையாக, சுமார் 100% வாக்குச் சாவடிகளில் இணையதள ஒளிபரப்பு நடத்தப் பட்டது.
ஐந்து தொகுதிகளில் ஒரு வாக்குச் சாவடி 24 மணி நேரமும் இணைய தள ஒளிபரப்புக் கண்காணிப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டது.
இடைத்தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு மறு மதிப்பீட்டுத் திருத்தம் (SSR) நடத்தப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளது.