மே மாதத்தில் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தில் (UPI) மேற்கொள்ளப் பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ஆனது 18.68 பில்லியன் அளவையும், 25.14 டிரில்லியன் ரூபாய் மதிப்பையும் எட்டின.
இந்தப் பரிவர்த்தனையில் பதிவான முந்தைய சாதனை அளவு, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், எண்ணிம பண வழங்கீட்டு அமைப்பானது 18.3 பில்லியன் அளவையும், 24.77 டிரில்லியன் ரூபாய் மதிப்பையும் எட்டியபோது பதிவானது.
UPI செயலிகள் ஆனது ஏற்கனவே பூடான், பிரான்சு, மொரீஷியஸ், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் QR குறியீடுகள் வழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய நாட்டுப் பயணிகள் UPI தளங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டில் வணிகக் கொடுப்பனவுகளை மேற்கொள்ள இது வழிவகுக்கிறது.