TNPSC Thervupettagam

2026 தேர்தல்களில் சட்டவிரோத வாக்குப்பதிவு

May 16 , 2026 5 days 81 0
  • சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், மோசடியாகப் பெறப்பட்ட அடையாள ஆவணங்களைக் கொண்டு வாக்களித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இதுவரை சுமார் 25 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
  • வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் ஆள்காட்டி விரல்களில் அழியாத மை (வாக்குச் சீட்டின் அடையாளம்) கண்டறியப்பட்டதை அடுத்து, குடிவரவுத் துறை அதிகாரிகள் அவர்களை இடை மறித்து, உள்ளூர் காவல்துறையினரால் காவலில் வைத்தனர்.
  • அவர்களுக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா, 2023, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் பிற சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப் பட்டன.
  • தேசிய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, 'வெளிநாட்டு வாக்காளர்' என்பவர், வேறு எந்த நாட்டிலும் குடியுரிமை பெறாத இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 20A-இன் கீழ் வாக்களிக்கப் பதிவு செய்து கொள்ளலாம் என்றாலும், அவர்கள் வாக்குச்சாவடியில் அசல் இந்தியக் கடவுச்சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்கள் வாக்களிக்கத் தடை செய்யப் பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்