TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான அவசர நடவடிக்கை

June 14 , 2021 1491 days 649 0
  • 2030 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்காக வேண்டி ஒரு அவசர நடவடிக்கைக்கான பிரகடனத்திற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • கோவிட் – 19 பெருந்தொற்றானது ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளதாகவும் எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் நோய்க் கண்டறிதல் போன்றவற்றினை அணுகுவதற்கான வாய்ப்புகளை தடம் மாற்றியுள்ளதாகவும் இது குறிப்பிட்டுள்ளது.
  • வருடாந்திர புதிய எய்ட்ஸ் (HIV) தொற்றுக்கான எண்ணிக்கையை 3,70,000க்கும் கீழ் குறைக்குமாறு உறுப்பினர் நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் சபையானது அறிவுறுத்தி உள்ளது.
  • மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் தொடர்பான வருடாந்திர இறப்பு எண்ணிக்கையை 2,50,000க்கும் கீழ் குறைக்குமாறும் வேண்டி இது வலியுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்