TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் அணுசக்தித் திறன்

August 8 , 2021 1469 days 606 0
  • இந்தியாவின் அணுசக்தித் திறனானது 2030 ஆம் ஆண்டில் தற்போது உள்ள 6,780 மெகா வாட் திறனிலிருந்து 22,480 மெகாவாட் திறனாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தியாவில் தற்போது 22 அணு உலைகள் உள்ளன.
  • காக்ரபார் அணு உலை-3 (700 மெகாவாட்) ஆனது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மின்சாரக் கட்டமைப்போடு இணைக்கப்பட்டது.
  • 8000 மெகாவாட் திறனுடைய 10 அணு உலைகள் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளன.
  • அதில் பாரதிய நபிக்யா வித்யுத் நிகாம் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டு வரும் 500 மெகாவாட் திறனுடைய முன்மாதிரி அதிவேக உற்பத்தி உலையும் உள்ளடங்கும்.
  • கூடுதலாக, ஒவ்வொன்றும் 700 மெகாவாட் திறன் கொண்ட உள்நாட்டிலேயேத் தயாரிக்கப் பட்ட அழுத்த கனநீர் உலைகள் (Pressurized Heavy Water Reactors) தொடர் முறையில் (fleet) நிறுவப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்