TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டில் உலகம் : பொதுக் கணக்கெடுப்பு அறிக்கை

April 7 , 2021 1536 days 683 0
  • இந்த அறிக்கை சமீபத்தில் UNESCO அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையானது மே 2020 மற்றும் செப்டம்பர் 2020 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டில் அமைதியான சமூகத்திற்கு மிகப்பெரிய சவால்களாக
    • காலநிலை மாற்றம்,
    • வன்முறை மற்றும் மோதல்,
    • பல்லுயிர்ப் பெருக்கத்தின் இழப்பு மற்றும் பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை,
    • தண்ணீர் மற்றும் வீட்டுவசதி, உணவுத் தட்டுப்பாடு ஆகியவை இருக்கும்.
  • கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களைப் பொருத்தவரை 2030 ஆம் ஆண்டில் எதிர் கொள்ளவிருக்கும் பல்வேறு சிக்கல்களுக்குக் கல்வி ஒன்றே முக்கிய தீர்வாக இருக்கும்.
  • இருப்பினும், வட அமெரிக்கர்கள் (அமெரிக்கா, கனடா) கல்வியில் அல்லாது அறிவியலையே நம்புகின்றனர்.
  • கல்வியைத் தவிர்த்து சர்வதேச ஒத்துழைப்பே இதற்கு மற்றுமொரு தீர்வாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்