2050 ஆம் ஆண்டுக்குள் 3வது மிகப்பெரிய இறக்குமதி நாடாக மாற உள்ள இந்தியா
September 24 , 2021
1415 days
545
- 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் 3வது மிகப்பெரிய இறக்குமதி நாடாக இந்தியா மாறும் வாய்ப்புள்ளது.
- ஐக்கிய ராஜ்ஜியத்தின் சர்வதேச வர்த்தகத் துறையினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
- 2050 ஆம் ஆண்டில் உலகளாவிய இறக்குமதியில் 5.9 சதவீத பங்களிப்புடன் இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய இறக்குமதி நாடாக மாறும்.
- சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா இடம் பெறும்.
- உலகின் மிகப்பெரிய இறக்குமதி நாடுகளின் பட்டியலில் 2.8% பங்களிப்புடன் இந்தியா தற்போது 8வது இடத்தில் உள்ளது.
- உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்ட அறிக்கையின்படி, இந்தப் பட்டியலில் 2030 ஆம் ஆண்டுக்குள் 3.9% பங்களிப்புடன் இந்திய நாட்டின் நிலை 4வது இடத்திற்கு உயரும்.

Post Views:
545