2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலையை அடையும் இந்தியா
November 8 , 2021 1694 days 691 0
2030 ஆம் ஆண்டுக்குள் உமிழ்வின் அளவை 50% வரைக் குறைப்பது உள்ளிட்ட ஐந்து அம்ச செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக 2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலையை அடைவதாக இந்தியா சமீபத்தில் அறிவித்தது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டின் 26வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP) இந்தியா இந்த உறுதிமொழியை அளித்தது.
பருவநிலை நிதியுதவிக்கான தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வளர்ச்சி அடைந்த நாடுகளை இந்தியா வலியுறுத்தியது.