சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஆரம்பகால ட்ரயாசிக் படிவுகளிலிருந்து ஒரு புதிய வகை சீலாகாந்த் மீன் இனத்தை அறிவியலாளர்கள் அடையாளம் கண்டு உள்ளனர்.
இது மடல் துடுப்பு மீன்களின் பண்டைய கால மரபினைச் சேர்ந்தவையாகும்.
இது சுமார் 249 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பகால ட்ரயாசிக் காலத்தின் ஸ்மிதிய காலத்தில் வாழ்ந்தது.
இது ஆசியாவில் ஒயிட்டியா இனத்தின் முதல் பதிவாகும்.
முந்தைய "ஒயிட்டியா" புதை படிவங்கள் மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் கிரீன்லாந்தில் கண்டெடுக்கப் பட்டாலும், ஆசியாவில் ஒரு போதும் கண்டு எடுக்கப் படவில்லை.