2வது ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு சபை (GCC) உச்சி மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது.
GCC, சீனா மற்றும் ஆசியான் ஆகியன "அமைதியான, வளமான மற்றும் நியாயமான எதிர்காலத்தை நோக்கிய ஒரு ஒருங்கிணைந்த மற்றும் கூட்டுப் பாதையை உருவாக்க" ஒப்புக் கொண்டுள்ளன.
GCC ஆனது பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஆசியான் அமைப்பின் உறுப்பினர் நாடுகள் இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகியனவாகும்.