இந்திய நாடானது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான 3வது அரிஹந்த் ரக கப்பலினை விசாகப் பட்டினத்தில் வெளியிட்டது.
இது குறைந்தபட்சம் 8 என்ற அளவில் K-4 உந்துவிசை ஏவுகணைகளைச் சுமந்து செல்லக் கூடியது.
இதன் இயக்கத்தினைப் பற்றி, விசாகப்பட்டின கப்பல் கட்டமைப்பு மையத்திலிருந்து கிடைத்த ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் மூலமாக ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஜேன்ஸ் டிஃபன்ஸ் எனும் ஒரு வார இதழ் அறிவித்தது.
முதலாவது அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிஹந்த் கப்பல் 2016 ஆம் ஆண்டில் படையில் இணைக்கப்பட்டது.
2வது கப்பல் 2014 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டாலும் இந்தியக் கடற்படையில் இணைவதற்கு அது காத்திருக்கிறது.
அரிஹந்த் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் ரஷ்யாவின் உதவியுடன் கட்டமைக்கப் பட்டு வருகின்றன.