3 இந்திய அமைதிகாப்புப் படையினருக்கு மரியாதை – ஐக்கிய நாடுகள் அமைப்பு
June 1 , 2021 1813 days 915 0
கார்போரல் யுவ்ராஜ் சிங், பொதுமக்கள் அமைதிகாப்புப் படைவீரர் இவான் மைக்கேல் பிகார்டோ மற்றும் மூல்சந்த் யாதவ் ஆகியோருக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் மதிக்கத் தக்க விருதானது வழங்கப் பட்டுள்ளது.
கார்போரல் யுவ்ராஜ் சிங் தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காப்புத் திட்டப் பணியில் பணியாற்றினார் (United Nations Mission in South Sudan – UNMISS).
இவான் மைக்கேல் பிகார்டோ அவர்கள் UNMISS அமைப்பின் பொது மக்கள் அமைதி காப்புப் படை வீரராக இருந்தார்.
மூல்சந்த் யாதவ் ஈராக்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் உதவித் திட்டத்துடன் தொடர்பு உடையவராவார்.