3 வயது குழந்தைகளுக்கான கோவிட் எதிர்ப்பொருள் சோதனை – இஸ்ரேல்
August 26 , 2021 1544 days 649 0
3 வயது குழந்தைகளுக்கான கோவிட் எதிர்ப்பொருள் (ஆன்டிபாடி) சோதனையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
இது தடுப்பூசி போடப்படாத, கொரோனா வைரசிற்கு எதிரான எதிர்ப்பொருட்களைப் (ஆன்டிபாடியை) பெற்ற இளையோர்களின் சரியான எண்ணிக்கையைப் பெறுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படுவதைத் தொடர்ந்து இந்த சோதனைகள் தொடங்கப் பட்டு உள்ளன.
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதை இஸ்ரேல் ஏற்கனவே தொடங்கி விட்டது.