TNPSC Thervupettagam

3 புதிய விமான நிறுவனங்களுக்கு ஒப்புதல்

December 30 , 2025 15 hrs 0 min 24 0
  • சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆனது ஷாங்க் ஏர், அல் ஹிந்த் ஏர் மற்றும் ஃப்ளைஎக்ஸ்பிரஸ் ஆகியவற்றுக்கு தடையில்லாச் சான்றிதழ்களை (NOC) வழங்கியது.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாங்க் ஏர், நொய்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து தன் சேவைகளை வழங்கி, நிலை 1 மற்றும் நிலை 2 நகரங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • கேரளாவில் உள்ள அல் ஹிந்த் ஏர், ATR 72-600 விமானங்களுடன் பிராந்தியப் பயணிகள் விமான நிறுவனமாகத் தொடங்கவும், பின்னர் சர்வதேச அளவில் விரிவுபடுத்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • தெலுங்கானாவில் உள்ள ஃப்ளைஎக்ஸ்பிரஸ், நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது மற்றும் UDAN (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) போன்ற அரசு திட்டங்களையும் பயன்படுத்துகிறது.
  • செயல்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்காக விமான நிறுவனங்கள் பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.
  • இந்த முன்னெடுப்பு ஆனது, பிராந்திய இணைப்பை அதிகரிப்பதையும் உள்நாட்டு விமானப் பயணத்தை மலிவு விலையில் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்