TNPSC Thervupettagam

33வது ஆசியான் மற்றும் அது தொடர்புடைய மாநாடுகள்

November 18 , 2018 2454 days 768 0
  • ஆசியான் உச்சி மாநாட்டின் 33வது பதிப்பானது சிங்கப்பூரின் சன்டெக் சிங்கப்பூர் சமூதாய மையத்தில் நவம்பர் 15 அன்று முடிவடைந்தது.
  • இந்த உச்சி மாநாட்டின் முடிவுடன் இதனுடன் தொடர்புடைய கீழ்க்காணும் மற்ற மாநாடுகளும் முடிவடைந்தன.
    • 13 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு (EAS – East Asia Summit),
    • 2 வது விரிவான பிராந்திய பொருளாதார உச்சி மாநாடு (RCEP – Regional Comprehensive Economic Summit) மற்றும்
    • 21 வது ஆசியான் மற்றும் மூன்று நாடுகள் உச்சி மாநாடு
  • சிங்கப்பூரின் பிரதமர் லீ சியான் லூங் இந்த வருட உச்சி மாநாட்டின் தலைவராவார்.
  • லீ ஆசியானின் தலைமையை தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவிடம் ஒப்படைத்தார்.
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் 13-வது கிழக்காசிய மாநாடு, 2-வது RCEP மாநாடு மற்றும் ஆசியான்-இந்தியா ஆகிய மாநாடுகளில் கலந்து கொண்டார்.
  • இது பிரதமர் மோடியின் 5வது கிழக்காசிய மாநாடாகும். இந்தியாவானது 2005ஆம் ஆண்டு முதல் கிழக்காசிய மாநாட்டின் துவக்கத்திலிருந்தே பங்கேற்று வருகின்கிறது.
  • மேலும் பிரதமர் மோடி பின்டெக் (Fintech) மாநாட்டிலும் பார்வையாளர்களிடையே உரையாற்றினார்.
  • இதன் மூலம் சிங்கப்பூர் பின்டெக் விழாவில் பிரதான உரையை வழங்கிய முதல் அரசாங்கத் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார்.
  • வங்கிக் கணக்குகள் இல்லாமலேயே உலகளாவிய அளவில் இரண்டு பில்லியன் மக்களை சென்றடையக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட APIX என்ற வங்கி தொழில்நுட்பத்தை அவர் துவங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்