இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றாவது தேசிய நீர் விருதுகளை வழங்கி உள்ளார்.
நீர்வள மேலாண்மைத்துறையில் முன்மாதிரியான ஒரு பணிக்காக இது வழங்கப் படுகிறது.
மேலும் அவர் ‘ஜல் சக்தி அபியான்: 2022 ஆம் ஆண்டிற்கான மழை நீரைச் சேமியுங்கள்பிரச்சாரம்’ என்ற பிரச்சாரத்தினைப் புது தில்லியில் தொடங்கினார்.
உத்தரப் பிரதேசம் முதல் பரிசையும், அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசினையும் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் மதுரை மாநகராட்சி, "சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு" பிரிவில் விருது பெற்ற மாநகராட்சிகளுள் ஒன்றாகும்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் வெள்ளப் புத்தூர் ஊராட்சி தமிழ்நாடு "சிறந்த கிராம ஊராட்சி" என்ற பிரிவில் விருது பெற்ற ஊராட்சிகளுள் ஒன்றாகும்.
புதுச்சேரி காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர் அமலோற்பவம் லூர்து அகாடமி, உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அமிட்டி இன்டர்நேஷனல் பள்ளி ஆகியன சிறந்தப் பள்ளி என்ற பிரிவில் விருதுகளை வென்றன.