800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட 400 மைல் (700 கிமீ) நீளமுள்ள புதைபடிவ எரிமலை வளைவு தென் சீனாவின் யாங்சே தொகுதியின் கீழ் கண்டறியப் பட்டுள்ளது.
ரோடினியாவின் உடைவின் போது உருவான இது, தட்டையான தட்டின் கீழமிழ்தல் மூலம் ஏற்பட்டது, இதனால் பாறைக் குழம்பு மேலெழும்பியதுடன், ஆழமான பகுதி திடப்படுத்தப்பட்டது.
6 கிமீ ஆழம் வரையிலான வான்வழி காந்த உணர்திறன் மற்றும் ஆழ்துளைகள் இந்த வளைவு தொடர்பான புவி வேதியியலுடன் கூடிய எரிமலைப் பாறைகளை வெளிப் படுத்தின.
யுரேனியம்-ஈயம் காலக் கணிப்புகள் ஆனது இதன் உருவாக்கத்தினை, ஆரம்பகால நியோப்ரோடெரோசோயிக் சகாப்தத்தில் 770 முதல் 820 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக உறுதிப்படுத்தப்பட்டது.
வழக்கத்திற்கு மாறான அகலமான வளைவு (50 கிமீ வரை) ஆரம்பகாலக் கண்ட மேலோட்டின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய புரிதலை மறுவடிவமைக்கிறது.