TNPSC Thervupettagam

47வது அகில இந்திய காவல்துறை அறிவியல் மாநாடு

December 3 , 2019 2079 days 823 0
  • 47வது அகில இந்திய காவல்துறை அறிவியல் மாநாடானது 2019 ஆம் ஆண்டு  நவம்பர் 28 மற்றும் நவம்பர் 29 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள காவல்துறையின் தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
  • இந்த மாநாட்டின் தலைமை விருந்தினராக முன்னாள் காவல்துறை அதிகாரியும் புதுச்சேரியின் தற்போதையத் துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி கலந்து கொண்டார்.
  • இந்த மாநாடானது காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (Bureau of Police Research and Development - BPR&D) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடாந்திர மாநாட்டை உத்தரப் பிரதேச மாநிலம் நடத்துகின்றது.
  • இந்த மாநாடானது காவல்துறையில் பரவியிருக்கும் சவால்கள் மற்றும் அதனோடு  நெருங்கிய தொடர்புடைய தற்போதைய சூழ்நிலைக்குத் தேவையான 5 தலைப்புகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்