5வது சர்வதேச பாதுகாக்கப்பட்ட கடல்சார் பகுதிகள் மாநாடு
March 8 , 2023 989 days 529 0
சமீபத்தில், 5வது சர்வதேச பாதுகாக்கப்பட்ட கடல்சார் பகுதிகள் மாநாடு (IMPAC5) ஆனது கனடாவில் நடைபெற்றது.
பாதுகாக்கப்பட்ட கடல்சார் பகுதிகளுக்கான நிதி வழங்கீட்டில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான பல தீர்வுகளைப் பற்றி விவாதிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாநாடானது ஒரு தடையற்ற மற்றும் மதிப்புமிக்கச் சூழலில் பலவிதமான கருத்துகளுக்கு இடையே உலக நாடுகள் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தகவல், வெற்றி பெற்ற மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதற்குமான ஒரு மன்றத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் மூன்று பாதுகாக்கப்பட்ட கடல்சார் பகுதிகள் (MPAs) மதிப்புமிக்க ப்ளூ பார்க் விருதுகளை வென்றன.