ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) ஆனது, இந்தியா முழுவதும் உள்ள நகர்ப்புற உள் கட்டமைப்பை மாற்றுவதற்காக என்று 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான ஐந்தாண்டு முன்னெடுப்பை வெளியிட்டுள்ளது.
ஒரு மூன்றாம் தரப்பு மூலதனமும் அடங்கிய இந்தத் தொகை, மெட்ரோ போக்குவரத்து சேவை விரிவாக்கம், புதிய பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு வழித் தடங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்குப் பயன்படுத்தப் படும்.
நீர் வழங்கல், சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களில் 22 மாநிலங்களில் உள்ள சுமார் 110க்கும் மேற்பட்ட நகரங்களுடன் ADB ஏற்கனவே அது தொடர்பான பணியில் ஈடுப்பட்டுள்ளது.
ADB ஆனது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு (2025-2026 ஆம் நிதியாண்டு) 6.7% ஆகவும், அடுத்த ஆண்டு (2026-2027 ஆம் நிதியாண்டு) 6.8% ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
இது வளர்ந்து வரும் ஆசியப் பொருளாதாரங்களை விட 2 சதவீதப் புள்ளிகள் அதிகம் ஆகும்.
1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ADB ஆனது, ஆசியப் பிராந்தியத்தினைச் சேர்ந்த 50 உறுப்பினர்களுடன் மொத்தமாக 69 உறுப்பினர்களைக் கொண்டது.
இது 1986 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது.