5 நதிகள் இணைப்புத் திட்டம் அறிவிப்பு – மத்திய நிதிநிலை அறிக்கை
February 4 , 2022 1230 days 713 0
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது நிதிநிலை அறிக்கை உரையில் 5 நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து முன்மொழிந்தார்.
இந்த இணைப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நதிகளாவன; கோதாவரி - கிருஷ்ணா, கிருஷ்ணா – பெண்ணாறு மற்றும் பெண்ணாறு - காவிரி, தமன்கங்கா – பிஞ்சல் மற்றும் பார் – தபதி – நர்மதை ஆகியனவாகும்.
இந்தியாவின் 4வது மிகப்பெரிய நதியான கிருஷ்ணா நதி, மகாராஷ்டிராவிலுள்ள மகாபலீஸ்வரத்தில் உருவாகி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே பாய்கிறது.
மலையில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே பாய்கிறது.
இந்தியாவின் 3வது பெரிய நதியான கோதாவரி, நாசிக் என்னுமிடத்தில் உருவாகி மகாராஷ்டிரா, தெலுங்கான, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்கள் வழியே பாய்கிறது.
மும்பை நகரத்திற்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்காக தமன்கங்கா வடிகாலின் உபரி நீரைத் திருப்பி விடுவதை தமன்கங்கா – பிஞ்சல் நதி இணைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தென் குஜராத் பகுதியில் அமைந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள 7 நீர்த் தேக்கங்களில் இருந்து வரும் உபரி நீரைத் திருப்பி விடுவதன் மூலம் கட்ச் மற்றும் சௌராஷ்டிரம் போன்ற வறட்சியால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு வழங்குவதற்கு பார்-தபதி நர்மதை இணைப்புத் திட்டம் முன்மொழிந்து உள்ளது.