பொது நல வழக்கு விவகாரங்களை இந்திய உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்ற ஒரு புதிய பணிப் பட்டியலை இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, புதிதாக தாக்கல் செய்யப்படும் பொது நல வழக்குகள் இந்தியத் தலைமை நீதிபதியினாலும், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதியினாலும் விசாரிக்கப்பட்டு வந்தன.