TNPSC Thervupettagam

5-வது ட்ரோனியர் விமானப் படை

July 23 , 2019 2121 days 760 0
  • 5-வது ட்ரோனியர் விமானப் படையான, இந்தியக் கடல் விமானப் படை (INAS - Indian Naval Air Squadron) பிரிவு 313 ஆனது கடற்படைத் தளபதி கரம்பீர் சிங்கால் இந்தியக் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
  • இந்த விமானப் படையானது சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து செயல்படவிருக்கின்றது.
  • இந்தியக் கடற்படையில் INAS 313 இணைக்கப்பட்டதன் மூலம், எந்தவொரு கடலோர மாநிலத்திலும் இல்லாத அதிக எண்ணிக்கையிலான கடற்படை விமானத் தளங்களை தமிழ்நாடு பெறவிருக்கின்றது.
  • இதர இரண்டு கடற்படை விமானத் தளங்கள் பின்வருமாறு:
    • அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி
    • ராமநாதபுரத்தில் உள்ள ஐஎன்எஸ் பருந்து
  • கடல்சார் கண்காணிப்பு, தேடுதல் & மீட்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயுத தளங்களுக்கு இலக்கு குறித்த தரவுகளை அளித்தல் ஆகிய பணிகளுக்கு இந்த விமானம் பயன்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்