51வது G7 உச்சி மாநாடு 2025
- கனடா நாடானது, 2025 ஆம் ஆண்டு G7 உச்சி மாநாட்டினை ஜூன் 15 முதல் 17 ஆம் தேதி வரை கனடாவின் ஆல்பர்ட்டா நகரில் நடத்த உள்ளது.
- 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு கனனாஸ்கிஸ் நகரம் இந்த ஒரு மாநாட்டினை நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.
- முதல் G7 கூட்டத்தின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
- கனடாவுடனான தொடர்ச்சியான அரசு முறை உறவு சார் பதட்டச் சூழல் காரணமாக இந்தியா இம்முறை இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
- 2019 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்தியா அனைத்து உச்சி மாநாட்டிலும் பங்கேற்று உள்ளது.
- இதன் முந்தைய உச்சி மாநாடுகள் ஆனது 2022 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலும், 2023 ஆம் ஆண்டில் ஜப்பானிலும், 2024 ஆம் ஆண்டில் இத்தாலியிலும் நடத்தப்பட்டன.
- G7 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகியனவாகும்.

Post Views:
73