TNPSC Thervupettagam

5வது BIMSTEC உச்சி மாநாடு

April 2 , 2022 1226 days 681 0
  • இந்த உச்சி மாநாடானது இலங்கையில் கலப்பு முறையில் நடைபெற்றது.
  • 2022 ஆம் ஆண்டு BIMSTEC உச்சி மாநாட்டில் BIMSTEC சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு கையெழுத்திடப் பட்டது.
  • இந்த சாசனம் ஆனது, BIMSTEC குழுவை ஒரு கொடி, ஒரு சின்னம் மற்றும் உறுப்பினர் நாடுகளால் கடைபிடிக்கப்பட வேண்டிய முறைப்படி பட்டியலிடப்பட்ட கொள்கைகள் கொண்ட ஓர் அமைப்பாக முறைப்படுத்துகிறது.
  • BIMSTEC தலைவர்கள் 3 வெவ்வேறு BIMSTEC ஒப்பந்தங்கள் கையெழுத்தான ஒரு நடைமுறையையும் மேற்பார்வையிட்டனர்.
  • மேலும், BIMSTEC செயலகத்திற்கு அதன் செயல்பாட்டு வரவு செலவுத் திட்டத்தை அதிகரிப்பதற்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய நாட்டினால் வழங்கப் படும்.
  • நாளந்தா சர்வதேசப் பல்கலைக்கழகம் வழங்கும் BIMSTEC உதவித் தொகை திட்டத்தின் நோக்கமும் விரிவுபடுத்தப் படுகிறது.
  • உறுதியானப் பிராந்தியத்தை நோக்கி, வளமானப் பொருளாதாரம், ஆரோக்கியமான மக்கள் (Towards a Resilient Region, Prosperous Economies, Healthy People) என்பது இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்