TNPSC Thervupettagam

5வது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபை

April 9 , 2022 1217 days 712 0
  • இந்த சபையானது 193 ஐநா உறுப்பு நாடுகளால் ஆனது.
  • இது உலகளாவிய சுற்றுச்சூழல் நிர்வாகத்தை முன்னேற்றுவதற்காக வேண்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது.
  • இது கென்யாவின் நைரோபியில் நடத்தப் பட்டது.
  • இது நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைந்திடச் செய்வதற்காக  இயற்கைக்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த 14 தீர்மானங்களுடன் முடிவடைந்தது.
  • 2024 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான ஆணையுடன் அரசுகளுக்கு இடையேயான ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை நிறுவ சபை ஒப்புக் கொண்டது.
  • இதைத் தொடர்ந்து UNEP@50 என்ற நிகழ்வு நடைபெற்றது.
  • 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டின் ஒரு முன்முயற்சியாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் திட்டம் (UNEP - United Nations Environment Programme) நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு விழாவை உலக நாடுகள் கொண்டாடின.
  • நைரோபியில் இத்திட்டத்தின் தலைமையகத்தை நிறுவுவதற்கான ஒரு முடிவு 1972 ஆம் ஆண்டில் ஐ.நா.வால் எடுக்கப்பட்டது.
  • நைரோபியில் உள்ள இந்த ஐக்கிய நாடுகளின் அலுவலகமானது தெற்கு அரைக் கோளத்தில் உள்ள ஒரே UN தலைமையகமாக உள்ளது.
  • ஓசோன் அடுக்கைச் சேதப்படுத்தும் பொருட்களின் மீதான மாண்ட்ரியல் என்ற நெறி முறையை ஏற்க உதவும் வகையில் 1987 ஆம் ஆண்டில் உலகளாவியத் தீர்வை ஏற்றுக் கொள்வதற்கு UNEP பங்களித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்