2025 ஆம் ஆண்டு கடலோர மாநிலங்களின் மீன்வளக் கூட்டமானது மிகச் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.
5வது கடல் மீன்வளக் கணக்கெடுப்பு (MFC) ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று தொடங்கியது.
இது ஒவ்வொரு கடல்சார் மீனவர் குடும்பம், மீனவக் கிராமம், மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள், அத்துடன் நாடு முழுவதும் உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன்கள் கொண்டு வந்து விற்கப்படும் மையங்களுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகளையும் ஆவணப்படுத்தும்.
மிகவும் முதல் முறையாக, இந்தக் கணக்கெடுப்பு ஆனது புவிசார் குறிப்பிடல், செயலி அடிப்படையிலான எண்ணிம அமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதால், இது நிகழ்நேரச் சரிபார்ப்பு அம்சத்தைக் கொண்டிருக்கும்.
ICAR-CMFRI ஆனது, எண்ணிம அடிப்படையிலான தரவுச் சேகரிப்புக்காக என்று 'VyAS-NAV' என்ற கைபேசிச் செயலியை உருவாக்கியுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் மத்தியக் கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CMFRI) ஆனது இந்தக் கணக்கெடுப்பைச் செயல்படுத்துவதற்கான ஒரு முதன்மை நிறுவனமாகும்.
கடைசியாக இது போன்ற கணக்கெடுப்பு ஆனது 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது என்பதோடு அதன்படி இந்தியாவின் 13 கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 3,477 மீனவக் கிராமங்கள் இருந்தன.
இந்தக் கூட்டத்தின் போது மத்திய அரசாந்து "முதல் மீன் வளர்ப்புக் காப்பீட்டுத் திட்டம்" என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தது.
இது பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்ட ஒரு துணைத் திட்டமான பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ்-யோஜனா (PM-MKSSY) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.