TNPSC Thervupettagam

5வது கடல் மீன்வளக் கணக்கெடுப்பு

May 2 , 2025 44 days 97 0
  • 2025 ஆம் ஆண்டு கடலோர மாநிலங்களின் மீன்வளக் கூட்டமானது மிகச் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.
  • 5வது கடல் மீன்வளக் கணக்கெடுப்பு (MFC) ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று தொடங்கியது.
  • இது ஒவ்வொரு கடல்சார் மீனவர் குடும்பம், மீனவக் கிராமம், மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள், அத்துடன் நாடு முழுவதும் உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன்கள் கொண்டு வந்து விற்கப்படும் மையங்களுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகளையும் ஆவணப்படுத்தும்.
  • மிகவும் முதல் முறையாக, இந்தக் கணக்கெடுப்பு ஆனது புவிசார் குறிப்பிடல், செயலி அடிப்படையிலான எண்ணிம அமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதால், இது நிகழ்நேரச் சரிபார்ப்பு அம்சத்தைக் கொண்டிருக்கும்.
  • ICAR-CMFRI ஆனது, எண்ணிம அடிப்படையிலான தரவுச் சேகரிப்புக்காக என்று 'VyAS-NAV' என்ற கைபேசிச் செயலியை உருவாக்கியுள்ளது.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் மத்தியக் கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CMFRI) ஆனது இந்தக் கணக்கெடுப்பைச் செயல்படுத்துவதற்கான ஒரு முதன்மை நிறுவனமாகும்.
  • கடைசியாக இது போன்ற கணக்கெடுப்பு ஆனது 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது என்பதோடு அதன்படி இந்தியாவின் 13 கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 3,477 மீனவக் கிராமங்கள் இருந்தன.
  • இந்தக் கூட்டத்தின் போது மத்திய அரசாந்து "முதல் மீன் வளர்ப்புக் காப்பீட்டுத் திட்டம்" என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தது.
  • இது பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்ட ஒரு துணைத் திட்டமான பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ்-யோஜனா (PM-MKSSY) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்