TNPSC Thervupettagam

6-வது இந்திய திறன்கள் அறிக்கை

December 2 , 2018 2436 days 752 0
  • இந்திய திறன்கள் அறிக்கையின் 6-வது பதிப்பான 2019 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி அதிகபட்ச வேலைவாய்ப்பு திறன்களுடன் ஆந்திரப் பிரதேசமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
  • இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புத் திறன்களுடன் அதிகப்படியாக வேலைவாய்ப்பு உள்ள மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசமும் ஒன்றாகும்.
  • பெண்களின் வேலைவாய்ப்புத் திறன் 46% மற்றும் ஆண்களின் வேலைவாய்ப்புத் திறன் 48% ஆகியவற்றுடன் மொத்த வேலைவாய்ப்புத் திறன் 47% ஆக உயர்ந்துள்ளது.
  • இந்த அறிக்கை கீழ்க்காண்பனவற்றின் கூட்டு முயற்சியாகும்.
    • உலகளாவிய திறன் மதிப்பீட்டு நிறுவனமான வீபாக்ஸ் (Wheebox)
    • முன்னணி மனித வள தொழில்நுட்ப நிறுவனமான PeopleStrong மற்றும்
    • இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry)
  • மேலும் இது,
    • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme)
    • தொழில்நுட்ப கல்விக்கான அனைத்திந்திய குழுமம் ( All India Council for Technical Education)
    • இந்தியப் பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு (Association of Indian Universities) போன்ற புகழ்மிக்க பங்காளர்களால் ஆதரிக்கப்படுகிறது.
  • இந்த அறிக்கையானது உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்