TNPSC Thervupettagam

6 கோடி அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகைப் பாதிப்பு பரிசோதனை

July 28 , 2025 2 days 30 0
  • தேசிய அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை திட்டத்தின் கீழ் மொத்தம் ஆறு கோடி நபர்களுக்கு அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் பரிசோதனை செய்யப் பட்டுள்ளது.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி இந்தத் தகவல் கூறப்படுகிறது.
  • மத்தியப் பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் உத்தர காண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் இலக்குகளுடன் ஒப்பிடும் போது அதிக சதவீதப் பரிசோதனையை அடைந்தன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
  • ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் கண்டறியப் பட்ட நோய்ப் பரிசோதனைகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன.
  • தேசிய அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை ஒழிப்பு இயக்கம் ஆனது 2023 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்த இயக்கம் ஆனது பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பகுதிகளில் 0 முதல் 40 வயது வரையிலான ஏழு கோடி நபர்களுக்கு அனைவருக்குமானப் பரிசோதனை வழங்கல் மூலம் 2047 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலிருந்து அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை பாதிப்பினை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்