TNPSC Thervupettagam

700 MWe திறன் கொண்ட PHW உலைகள்

July 12 , 2025 11 days 40 0
  • குஜராத் மாநிலதில் உள்ள கக்ராபர் அணுமின் நிலையத்தில் (KAPS) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டு 700 MWe திறன் கொண்ட அழுத்தப்பட்ட கன நீர் அணு உலை வகைகளுக்கு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) சமீபத்தில் 5 ஆண்டு காலச் செயல்பாட்டு உரிமத்தை வழங்கியது.
  • இது இந்திய அணுசக்திக் கழகத்தின் (NPCIL) 700 MWe திறன் கொண்ட அளவில் 10 PHWR உலைகளை உருவாக்கும் திட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது.
  • PFBR வகைகளைத் தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து வகையான அணு மின் நிலையங்களையும் NPCIL சொந்தமாக வைத்து, இயக்குகிறது.
  • PFBR வகைகள் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திற்குச் சொந்தமானவை ஆகும்.
  • இந்தியாவானது தற்போது 220 MWe திறன் கொண்ட 15 PHWRகளையும், 540 MWe திறன் கொண்ட 2 PHWRகளையும் இயக்குகிறது.
  • இராஜஸ்தானின் இராவத்பட்டாவில் ஏற்கனவே 700 MWe திறன் கொண்ட ஓர் உலை உள்ளது.
  • PHWR என்பது கன நீரை (டியூட்டீரியம் ஆக்சைடு, DO) ஒரு குளிரூட்டியாகவும் வேக மிதமாக்கியாகவும்  பயன்படுத்தும் ஒரு வகை அணு உலையாகும்.
  • இயற்கை அல்லது சற்று செறிவூட்டப்பட்ட யுரேனியம் இதற்கு எரிபொருளாகச் செயல் படுகிறது.
  • AERB என்பது நாட்டில் அணுசக்தி மற்றும் கதிர்வீச்சுத் தொழில்நுட்பங்களின் மிகவும் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள இந்தியாவின் தேசிய ஒழுங்குமுறை ஆணையமாகும்.
  • AERB ஆனது 1983 ஆம் ஆண்டில் 1962 ஆம் ஆண்டு அணுசக்திச் சட்டத்தின் கீழ் நிறுவப் பட்டது.
  • இது அணுசக்தித் துறையின் (DAE) கீழ் ஒரு சுயாதீன அமைப்பாக செயல்படுகிறது.
  • இந்தியாவின் அணுசக்தி திறன் ஆனது தற்போது 8.18 GW ஆக உள்ளது.
  • அதன் இலக்குகள் 2031–32 ஆம் ஆண்டில் 22.48 GW ஆகவும், 2047 ஆம் ஆண்டில் 100 GW ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்