தமிழ்நாடு அரசானது, ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்துள்ளது.
ஆறாவது ஆணையம் ஆனது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆளுநரிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
தற்போதைய இந்தக் குழுவானது பல்வேறு நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மதிப்பாய்வு செய்து, மாநில அரசு வழங்க வேண்டிய நிதி விநியோகம் குறித்து பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும்.
ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான K. அலாவுதீன் அதன் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்த ஆணையம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்பதோடு அது 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் ஐந்து ஆண்டு காலம் செயல்பாட்டில் இருக்கும்.
இந்தக் குழுவின் ஒரு அலுவல்சாரா உறுப்பினராக திருப்பூர் மேயர் N. தினேஷ் குமார் இருப்பார்.
நகராட்சி நிர்வாக இயக்குநர், ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் மற்றும் பேரூராட்சி ஆணையர் ஆகியோர் இந்த ஆணையக் குழுவின் அலுவல்வழி உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பிரதிக் தயால் குழுவின் உறுப்பினர்-செயலராக இருப்பார்.