TNPSC Thervupettagam

8வது வருடாந்திர ஒப்பந்ததாரர்கள் கூட்டம் 2025

September 30 , 2025 4 days 14 0
  • புவி அறிவியல் அமைச்சகமானது, சர்வதேச கடல்படுக்கை ஆணையத்தின் (ISA) 8வது வருடாந்திர ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தினை கோவாவில் நடத்தியது.
  • கோவாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் (CSIR) தேசிய கடல் சார் ஆய்வு நிறுவனம் (NIO) ஏற்பாடு செய்த நிகழ்வில் ரஷ்யா, ஜப்பான், சீனா மற்றும் பிற நாடுகள் உட்பட 14 ISA ஆய்வு ஒப்பந்ததாரர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
  • இந்தக் கூட்டமானது ஆழ்கடல் ஆய்வு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சார்ந்த கவலைகள், ஒப்பந்த இணக்கம் மற்றும் நிலையான கடல் வள மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
  • இந்தியா இந்தியப் பெருங்கடலில் பல் கனிமச் சல்பைடுகளுக்கான (PMS) இரண்டு ஆய்வு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளதோடு ISA ஆணையத்தின் கீழ் இத்தகைய இரட்டை ஒப்பந்தங்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாவாகும்.
  • 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சகத்திற்கும் ISA ஆணையத்திற்கும் இடையே இரண்டாவது PMS ஆய்வு ஒப்பந்தமானது கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்