TNPSC Thervupettagam

800 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில்

June 12 , 2025 2 days 36 0
  • மேலூர் தாலுக்காவில் உள்ள ஊடம்பட்டி என்ற கிராமத்தில், சுமார் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலத்தைச் சேர்ந்த ஒரு சிவன் கோயில் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • கல் தளத்தின் மீது பதிக்கப்பட்ட இரண்டு தமிழ்க் கல்வெட்டுகள், கி.பி 1217-1218 ஆம் ஆண்டு காலத்தை அதாவது மாறவர்மன் சுந்தர பாண்டியனின் ஆட்சிக் காலத்தினைச் சேர்ந்தவை என்பதை எடுத்துரைக்கின்றன.
  • இந்தக் கல்வெட்டுகளின் படி, அந்தக் கிராமத்தின் பெயர் ஆத்தூர் என்றும், கோயில் தென்னவனீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டதாக தெரிகிறது.
  • இந்தக் கல்வெட்டுகள், களவாளி நாட்டின் தலைவரான அழகப்பெருமாள் காங்கேயன் என்றழைக்கப்பட்ட நம்பி பெரம்பல குத்தன் என்பவரிடம் ஒரு நீர்நிலையை விற்பனை செய்ததற்கான பத்திரத்தைக் குறிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்